திருச்சி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!
திருச்சி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் அரசு சார்பில் வழக்காட புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி: திருச்சி மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் அரசு சார்பில் புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு சார்பில் வழக்காடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக ராஜ்குமார், அரசு உரிமையியல் வழக்கறிஞராக சின்னத்துரை, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞராக சம்பத்குமார், முதலாவது விரைவு நீதிமன்றத்தின் அரசு குற்றவியல் வழக்கறிஞராக வெங்கடேஷன், 2வது விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக தட்சிணாமூர்த்தி, மகளிர் நீதிமன்றத்தின் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞராக கிருஷ்ணவேணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சப்கோர்ட் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக ஜெயராமன், கூடுதல் அரசு உரிமையியல் வழக்கறிஞராக கங்கை செல்வன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞராக(மனித உரிமைகள் தொடர்பான வழக்குகள்) ஆச்சியப்பன் ஆகியோரும், மாவட்ட முன்சீப் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக துறையூர் ராஜசேகரன், முசிறி-பாரதிராஜா, மணப்பாறை-பெருமாள் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.