பக்கா ஆதாரங்களுடன் ராம மோகன ராவ் வீட்டில் சிக்கிய டைரி.. கலக்கத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள்
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் ரெய்டின் போது முக்கிய டைரி சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் ரெய்டின் போது முக்கிய டைரி சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர். விடிய விடிய 24 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது.

இதில் பல லட்சம் ரூபாய் பணம், கணக்கில் வராத தங்க நகைகள், மற்றும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் ரெய்டின் போது முக்கிய டைரி ஒன்று சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான தொடர்பு குறித்த பல முக்கிய தகவல்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.
விசாரணையில் ராம மோகன் ராவ் மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்து முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications