டெங்கு காய்ச்சலுக்கு பலியான 4 வயது குழந்தை.... உறவினர்கள் சாலை மறியல்: வீடியோ
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலுக்கு பலியான குழந்தை பூஜாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்: டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தை உடலை தேசிய நெடுஞ்சாலையில் கிடத்தி உறிவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சில நாட்களுக்கு முன் மணப்பாறைச் சேர்ந்த சின்னப்பொண்னு என்பவர் டெங்கிக் காய்ச்சலுக்கு பலியானார். அவரது உடலை தூக்கிச் செல்ல மருத்துவமனை ஊழியர்கள் இல்லாதால் தந்தையும் மகனுமே ஆம்புலன்ஸ்க்கு தூக்கிச் சென்ற அவலம் நிகழ்ந்தது.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரூர் மணவாசியைச் சேர்ந்த பூஜா என்ற நான்கு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால் தான் குழந்தை இறந்தது எனக் கூறி உறவினர்கள் திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர்.
அதில் அதிகமானோர் சிறுவர், சிறுமியராக இருப்பது வேதனை. டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த கிருமி நாசினிக்கு மட்டும் 16 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருந்த போதும் டெங்குக் காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications