சென்னையில் இன்றும், நாளையும் முன்பதிவில்லாமல் கேஸ்... இன்டேன் கேஸ் சிறப்பு முகாம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் முன்பதிவில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெய்த கனமழையால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் முன்பதிவில்லாமல் கேஸ் சிலிண்டர் விநியோகிக்க டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதில், சென்னையில் எந்த பகுதியைச் சேர்ந்த இன்டேன் வாடிக்கையாளரும் நேரடியாக பணம் செலுத்தி கேஸ் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சிறப்பு முகாம்கள் சென்னையில் 5 இடங்களில் நடைபெறுகிறது.
இன்டேன் வாடிக்கையாளர்கள், தங்களிடம் காலியாக உள்ள எரிவாயு உருளைகளைக் கொடுத்து, வாடிக்கையாளர் எண், விநியோகஸ்தரின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு பணத்தை கொடுத்து கேஸ் சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் விபரங்கள் பின் வருமாறு:
சுபம் கேஸ் ஏஜென்சி - மணலி புது நகர் - பாரத் ஸ்டேட் பாங்கு எதிரில் - தொடர்பு எண்கள்- 9444465191, 7358181660
ஸ்ரீ செல்லா கேஸ் ஏஜென்சி - தாம்பரம் ( கிழக்கு) - சொலையூர் காவல் நிலையம் எதிரில்- 9884056714, 9884097537
பட்டம்மாள் கேஸ் ஏஜென்சி - தாம்பரம் ( மேற்கு)- முடிச்சூர் கிறிஸ்தவ கோயில், சிவன் கோயில் அருகில்- 9941008205, 9884454397
பிரசன்னா கேஸ் ஏஜென்சி- கொரட்டூர் ( வடக்கு) - ஆர்சிட் ஸ்பிரிங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகில்- 9283103281, 9710190909
ஸ்ரீ அம்பிராம் இன்டேன் - சோழிங்கநல்லூர் - ஆவின் பாலகம் அருகில்- 9094434881, 044-24501333