உள்ளாட்சி தேர்தலில் தனது ஓட்டையும் மாற்றிப்போட்ட வேட்பாளர், ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோற்ற பரிதாபம்
Subscribe to Oneindia Tamil

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் படைவீடு பேரூராட்சியின் 9வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியது. மொத்தம் 699 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 607 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாப்புசாமி 61 ஓட்டுகளை பெற்றார்.
சுயேட்சை வேட்பாளர்கள் கோவிந்தசாமி 13 வாக்குகளையும், செந்தில் 18 வாக்குகளையும் பெற்றனர். மற்றொரு சுயேட்சை வேட்பாளர் பழனிசாமி ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதன் மூலம் இவர் தனது ஓட்டையும் வேறு வேட்பாளருக்கு போட்டுள்ளது தெரியவருகிறது. ஓட்டே ஒழுங்காக போடத் தெரியாதவருக்கு யாராவது ஓட்டு போடுவார்களா மக்களே.












Click it and Unblock the Notifications