இந்துக்கள் குறித்து பாரதிராஜா தவறாக பேசிவிட்டார்.. இந்து மக்கள் முன்னணி போலீசில் புகார்

இந்துக்களை தவறாக பேசியதாக பாரதிராஜா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்துக்களை தவறாக பேசியதாக பாரதிராஜா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. பாரதிராஜா வன்முறையை தூண்ட நினைப்பதாக இந்து மக்கள் முன்னணி கூறியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற போது பாரதிராஜா ஆண்டாள் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது '' இந்து மதத்தினர் யாரும் பெரிதாக மதம் மீது விசுவாசம் இல்லாதவர்கள். வைரமுத்து தமிழுக்கு நிறைய தொண்டாற்றி இருக்கிறார். வைரமுத்துவை வைத்து தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைப்போரின் ஆசை நிறைவேறாது.'' என்று குறிப்பிட்டார்.

Indhu Makkal Munnani files complaint on Bharathiraja

மேலும் ''மதம் எங்களுக்குள் எப்போதுமே கிடையாது. மீண்டும் எங்களை ஆயுதம் ஏந்த வைத்துவிடாதீர்கள், நாங்கள் ஆண்ட பரம்பரையினர். எங்களை எப்போதும் குற்றப்பரம்பரையினர் ஆக்கி விடாதீர்கள்.'' என்று குறிப்பிட்டார்.

இவர் குறிப்பிட்ட ''ஆயுதம் ஏந்த வைத்து விடாதீர்கள்'' என்ற கருத்துக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தற்போது இதற்கு எதிராக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

இந்துக்களை குறித்து தவறாக பேசியதாக பாரதிராஜா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. வடபழனி போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணி இந்த புகாரை அளித்து இருக்கிறது.

மக்களிடையே பிரிவினையை உருவாக்கி , கலவரத்தை துண்டை நினைப்பதாக இந்து மக்கள் முன்னணி குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+