சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழா- கப்பலில் ஈழத் தமிழர்கள் வர 'முதல் முறையாக' மத்திய அரசு அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவுக்கு இலங்கையில் இருந்து ஈழத் தமிழர்கள் கப்பலில் வந்து பங்கேற்க முதல் முறையாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி: சிதம்பரம் நடராஜர் கோவில் திருவிழாவுக்கு இலங்கையில் இருந்து ஈழத் தமிழர்கள் கப்பலில் வந்து பங்கேற்க முதல் முறையாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதன் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 1-ல் தேர்த் திருவிழா, 2-ல் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

டிசம்பர் 3 இரவு முத்துப்பல்லக்கு வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் இருந்து தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஆண்டுதோறும் வந்து பங்கேற்பது வழக்கம்.
இம்முறை இலங்கையில் இருந்து கப்பலில் ஈழத் தமிழர்கள் அழைத்துவரப்பட உள்ளனர். இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிதம்பரத்துக்கு கப்பலில் வருவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு வருவதற்கு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு எழுத்தாளர் மறவன்புலவு சச்சிதானந்தத்தால் உருவாக்கப்பட்ட சிவ சேனை என்ற அமைப்பின் முயற்சிகள் மூலம் மத்திய அரசிடம் இந்த அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு இப்படியா ஆகணும்












Click it and Unblock the Notifications