சென்னையில் ஜப்பானிய போர்க்கப்பல்- கடற்படையுடன் கூட்டு பயிற்சி!!
சென்னை: இந்தியா-ஜப்பான் இடையே கடற்படை பாதுகாப்பு உறவை அதிகரிக்கும் வகையில் 15ம் தேதியான நேற்று இரு நாட்டு கடற்படையின் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.
15 ஆண்டுகளாக இந்திய, ஜப்பான் வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடல் வழியாக ஊடுருவும் அந்நிய சக்திகளை தடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் நேற்றைய கூட்டுப் பயிற்சிக்காக முன்கூட்டியே இந்தியா வந்த ஜப்பான் கடலோரக் காவல் படை தளபதி டோவியா நிகுனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-ஜப்பான் இடையே சென்னை வங்கக் கடலில் "சக்யோக் கைஜின்" (Sahyog-Kaijin) என்ற பெயரில் ராணுவ தினமான நேற்று இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

இதில் ஜப்பானின் "எகிக்" (Echig) கப்பலும் பங்கேற்றது. வணிக கப்பல் கப்பல் கடத்தப்படும்போது அதை மீட்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக இரு நாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. இந்தியா-ஜப்பான் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இன்று வீரர்களிடையே நட்பு ரீதியிலான கைப்பந்து போட்டியும் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications