இலங்கை அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சேவை மத்திய அரசு அகற்ற வேண்டும்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: இலங்கையில் தமிழர் நலனுக்கும் இந்தியாவுக்கும் எதிராக இருக்கும் மகிந்த ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து மத்திய அரசு அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஜி.கே.வாசன் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும் பட்டுக்கோட்டை ரங்கராஜன் மட்டுமே சென்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகளுக்கு இடையூறு செய்யமாட்டோம் என்று ஜி.கே.வாசன் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
வாசனுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. அதையும் மீறி ஒரு சில இடங்களில் காங்கிரஸ் சொத்துகளை யாரேனும் அபகரித்தால் நானே நேரில் சென்று மீட்பேன்.
தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமையும். அல்லது காங்கிரஸ் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகும்.
எங்களைப் பொறுத்தவரை 5 ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்தது இலங்கை நீதித்துறை அல்ல. இலங்கையின் அதிபராக இருக்கும் ராஜபக்சேதான்.
இலங்கையில் தமிழர் நலனுக்கு எதிராக இருப்பவர் ராஜபக்சே. உலக நாடுகளில் தங்களுக்கு இடையூறாக எதிராக இருக்கும் ஒரு அரசை அகற்றுவது வல்லரசுகள் பணி.
அந்த வகையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை அகற்றிவிட்டு இந்தியாவுக்கு சாதகமான ஒரு அதிபரை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமே. ராஜிவ் கொலையில் தூக்கு விதிக்கப்பட்ட மூவரது தூக்கு தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications