தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மிக மிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!!
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இலங்கை வரை வளிமண்டலத்தில் நீடிக்கும் சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இந்த தகவலை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் தெரிவித்துள்ளளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 7 ஆம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் தெரிவித்துள்ளளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 7 ஆம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்கள்
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தேவைப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.8வரை கனமழை
அக்டோபர் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மழை குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபாலிடம் கேட்டறிந்தார்.

கேரளாவுக்கு எச்சரிக்கை
கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அங்கு வரலாறு காணாத மழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications