தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி மிக மிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!!
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி மிக அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இலங்கை வரை வளிமண்டலத்தில் நீடிக்கும் சுழற்சி காரணமாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இந்த தகவலை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் தெரிவித்துள்ளளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 7 ஆம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால் தெரிவித்துள்ளளார். ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக அக்டோபர் 7 ஆம் தேதி 25 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்கள்
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தேவைப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.8வரை கனமழை
அக்டோபர் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மழை குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபாலிடம் கேட்டறிந்தார்.

கேரளாவுக்கு எச்சரிக்கை
கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோது அங்கு வரலாறு காணாத மழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications