நாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி இந்திய கடற்படையினர் கொடூர தாக்குதல்- தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
நடுக்கடலில் நாகை மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டிணம்: தமிழக மீனவர்களை நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினர் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்கச்சென்ற தமிழக மீனவா்கள் மீது இந்திய கடற்படையினா் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவா்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசு பறிமுதல் செய்த தமிழக மீனவா்களின் படகுகளை சமீபத்தில் விடுவித்து உத்தரவிட்டது. அந்த படகுகளை மீட்க இரண்டாம் கட்டமாக தமிழக குழு இலங்கை சென்றது. இலங்கை சென்ற தமிழக மீனவா்களுக்கு போதிய அளவில் எாிபொருள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து படகுகளை மீட்டு இந்திய பகுதியை நோக்கி மீனவா்கள் வந்தபோது ஒரு படகு பழுதாகி நின்றுள்ளது. இதனால் கூடுதல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
கால தாமதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து தமிழக மீனவா்களுக்கும், இந்திய கடற்படைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவா்களை இந்திய கடற்படையினா் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மீனவா் அதிர்ச்சியடைந்தனர். காயமடைந்த மீனவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்திய கடற்படையினா் இலங்கை கடற்படையினரைப் போன்றே செயல்பட்டனா். அவா்கள் எங்களது ஆடைகளை களைந்து மிகவும் அவமானப்படுத்தியதாக புகார் தெரிவித்தார்.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எங்களது வளைகளையும் சேதப்படுத்தி விட்டனா் என்று மீனவா் குற்றம் சாட்டினாா். தாக்குதலில் காயமடைந்த மானவா் செந்தில் குமாா் உள்ளிட்ட மீனவா்கள் நாகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இவ்வளவு காலம் இலங்கை கடற்படையினரால் அவதிக்குள்ளான நாங்கள் தற்போது இந்திய கடற்படையால் தாக்கப்படுவது மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்குவதாக மீனவா்கள் வருத்தம் தொிவித்துள்ளனா்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவது, மீனவர்களின் வலைகளை அறுப்பது, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வது என தொடர்ந்து பல அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் தமிழக மீனவர்களின் சில படகுகளை இலங்கை அரசு விடுப்பதாக அறிவித்தது. இதனால் தங்கள் படகுகளை மீட்க சென்ற நாகை மாவட்ட மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் அத்துமீறி நடந்திருப்பதும், அவர்களை தாக்கி இருப்பதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை பாதுகாப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications