சிம்புவின் உருவப் படங்களை எரித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.. கைது செய்யவும் கோரிக்கை
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் உருவப்படத்தை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரைக் கைது செய்ய கோரியும் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பி வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் தியாகராய நகரில் சிம்புவின் வீட்டை முற்றுகையிட சென்றனர். ஆனால் காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தியதால் அவரின் உருவப்படங்களை தீவைத்துக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆபாசப் பாடலை வெளியிட்ட சிம்புவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் சிம்பு மற்றும் அனிருத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கோவையைத் தொடர்ந்து சேலம், விருதுநகர், கோவில்பட்டி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் இருவருக்கும் எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க சிம்பு மற்றும் அனிருத் தரப்பில் முன் ஜாமீனுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications