அசாமில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த 17 நாள் குழந்தை திடீர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அசாம் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தனது மனைவி மதுமிதா மற்றும் பிறந்து 17 நாட்களே ஆன ஆண் குழந்தையுடன் கவுகாத்தியில் சென்னைக்கு இன்று விமானத்தில் வந்தார்.

விமானத்தில் வந்த போது குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானம் இறங்கியவுடன் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குழந்தை இறந்தது.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications