சுவாதி கொலை.. இன்போசிஸ் என்ன சொல்கிறது?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று காலையில் தங்கள் நிறுவன ஊழியர் சுவாதி, மர்ம நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவாதி சாவுக்கு, இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் கூறியுள்ளதாவது: நடைபெறக்கூடாத சோக சம்பவத்தால் எங்களது ஊழியர் உயிர் பறிபோயுள்ளது. கொலை பற்றி விசாரிக்கும் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
சுவாதியை கொடூரமாகக் குத்திக் கொன்றவர் இவரா?.. சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை- வீடியோ
விசாரணை அமைப்புக்கு எங்களின் முழு ஒத்துழைப்பை அளிப்போம். இந்த சோகமான நேரத்தில், சுவாதியின் குடும்பத்தாருக்கு தேவைப்படும் உதவிகளை செய்வோம். இவ்வாறு இன்போசிஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications