ஜெ.வின் ஆர்.கே.நகர் தொகுதியில் ‘மை’ பிரச்சினை... கள்ள ஓட்டு அபாயம்.. மறுதேர்தல் நடத்த கோரிக்கை!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அழியக்கூடிய மை பயன்படுத்தப்படுவதால் கள்ள ஓட்டுப் போடும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வரானார். இதனால் சட்டசபை தேர்தலிலும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.

இத்தொகுதியில் திமுக சார்பில் சிம்லா ராஜேந்திரனும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புதுவார்டு நேருநகர் 8வது தெருவில் உள்ள இசிஐ மெரிட் மேல்நிலைப்பள்ளியில் 14 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையில் திடீரென சிறிதுநேரம் மின்சாரம் தடைபட்டது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது.
அதற்குப் பின்னர் வாக்களிக்க வந்தவர்களின் கைகளில் வைக்கப்பட்ட மை, எளிதாக அழிவதாக எதிர்க்கட்சியினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் வழங்கிய அழியாத மை எப்படி மாறியது என திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். மின் தடை ஏற்பட்ட போது, தேர்தல் ஆணையம் அளித்த அழியாத மை மாற்றப்பட்டு, எளிதில் அழியும் மை மாற்றப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் கள்ளஓட்டு அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆர்.கே.நகரில் மறு வாக்குப்பதிவு நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லக்கானி பதில்:
இதற்கிடையே, வாக்குப்பதிவு நிலவரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் ஆர்.கே.நகர் மை மாறிய குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்' எனப் பதிலளித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications