எலைட் கடைகளை நிறையத் திறக்கலாம்.. ஆலோசனை கூறும் உளவுப் பிரிவு போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்குத்தான் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதே தவிர எலைட் மதுக் கடைகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்று தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூறியுள்ளது.

தமிழக அரசுக்கு இதுதொடர்பாக உளவுப் பிரிவு போலீஸார் அறிக்கை தயாரித்து அளித்துள்ளனர். இந்த அறிக்கையை உளவுப் பிரிவு ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் அரசிடம் கொடுத்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அபூர்வா வர்மா கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. அதில் எலைட் கடைகளை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மால்களில்

மால்களில்

தமிழக அரசு சில வருடங்களுக்கு முன்புதான் எலைட் மதுக் கடைகளை அறிமுகப்படுத்தியது. சாதாரண டாஸ்மாக் கடைகளைப் போல இல்லாமல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களில் செயல்படும்.

கொஞ்சம் ஒஸ்தி

கொஞ்சம் ஒஸ்தி

டாஸ்மாக் கடைகளை விட இவை சற்று ஒஸ்தியானவை. வெளிநாட்டு சரக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. விலையும் கூட.

50க்கும் மேற்பட்ட கடைகள்

50க்கும் மேற்பட்ட கடைகள்

தமிழகம் முழுவதும் தற்போது 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த எலைட் கடைகள் உள்ளன.

கோவையில்தான் அதிகம்

கோவையில்தான் அதிகம்

இதில் கோவையில்தான அதிக அளவிலான எலைட் கடைகள் உள்ளன. அடுத்து மதுரை, திருச்சி, சென்னையில் அதிக அளவிலான கடைகள் உள்ளன.

போலீஸ் அறிக்கை

போலீஸ் அறிக்கை

தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக மக்களின் மன நிலையை அறிந்துள்ள உளவுப் பிரிவு போலீஸார், மதுக் கடைகளை பாதி அளவுக்கு மூடி விட்டு எலைட் கடைகளை அதிகம் திறக்க பரிந்துரை செய்துள்ளது.

அரசு என்ன செய்யும்

அரசு என்ன செய்யும்

உளவுப் பிரிவின் அறிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. விரைவில் மக்களுக்குப் பிடித்தமான செய்தியை அரசு சொல்லுமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+