மகனுக்கு மா.செ. பதவி வாங்கிக் கொடுத்து தலைமை கழக பதவிக்கு துண்டுபோட்ட திண்டுக்கல் ஐ. பெரியசாமி!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக தன் மகன் செந்தில்குமாரை பதவியில் உட்கார வைத்துவிட்டு தலைமைக் கழக பதவிக்கு துண்டு போட்டுக் காத்திருக்கிறார் திண்டுக்கல் ஐ. பெரியசாமி.

தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலின் போது, தற்போது போட்டியிடுபவர்கள் எதிர்காலத்தில் தனக்கோ மகனுக்கோ லோக்சபா, சட்டசபை மற்றும் கட்சிப் பதவிகளில் இடம் கேட்கக் கூடாது என்ற உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட கருணாநிதி கட்டளையிட்டார்.

IP will get New Post in DMK?

இதை ஏற்று 18 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்திட்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி கையெழுத்திடவில்லை.

கருணாநிதியின் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடாத திண்டுக்கல் பெரியசாமி தன் மகன் செய்தில்குமாரை கிழக்கு மாவட்ட செயலாளராக்கிவிட்டார். தனக்கு எப்படியும் தலைமைக் கழக பதவி கிடைக்கும் என தேவுடு காத்திருக்கிறார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக ஒட்டன்சத்திரம் சக்கரபாணியையும் பஞ்சாயத்து இல்லாமல் வெற்றி பெற வைத்து தலைமையிடத்தில் 'நன்மதிப்பை' பெற்று கனவோடு காத்திருக்கிறார் ஐ.பி.
.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+