ஜெயலலிதாவின் "ஆவி" ஓபிஎஸ் உடம்பில் புகுந்துருச்சோ?
அம்மாவின் ஆன்மா உந்தியதால் உண்மைகளை சொல்ல வந்தேன் என்று ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் ஓபிஎஸ் உடம்பில் புகுந்து உண்மை
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவருடைய உடல் எம்ஜிஆர் நினைவிட வாளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்தே அவருடைய ஆன்மா அந்த நினைவிடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அழுக்குரல் கேட்பதாக மற்றொரு வதந்தியும் பரவலாக பரவியது.

வர்தா புயலின் போது சென்னையே பெரும் பிரச்சனைக்குள்ளான நிலையில் ஜெயலலிதா நினைவிட மேற்கூரைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.ஜெயலலிதாவின் ஆவி தான் தனது நினைவிடத்தை காப்பதாகவும் அதனால் தான் நினைவிடக்கூரைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனையடுத்து மெரீனா கடற்கரையில் பெரும் புரட்சி வெடித்தது. ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மெரீனா கடற்கரையில் புரட்சி நடத்தினர். இதனைத் தொடர்ந்து சில நாட்களில் கப்பல்கள் மோதி எண்ணெய் கசிவு கடலில் கலந்து மாசடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 45 நிமிடங்கள் மவுனமாக அமர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் சசிகலா பற்றி பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார். இதனால் தமிழக அரசியல் களம் ஒரே நாள் இரவில் பரபரப்படைந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் ஆன்மா உந்தியதால்தான் தான் உண்மைகளை கூற வந்ததாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
என்னுடைய மனக்கவலைகளை கூற மட்டும் வரவில்லை. புரட்சித்தலைவரின் கோடான கோடி தொண்டர்களுக்கும் நடந்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும் என்று அம்மாவின் ஆன்மா என்னை உந்தியது என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
ஜெயலலிதாவிற்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்பட்டவில்லை என்றும் அதனால் தான் அவரது ஆன்மா சாந்தியடையாமல், நினைவிடம், போயஸ் இல்லம் போன்றவற்றில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இப்போது ஒ.பன்னீர் செல்வமும் அம்மாவின் ஆன்மா உந்தியது என்று கூறியுள்ளதால் ஒருவேளை சசிகலாவை பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெயலலிதாவின் ஆன்மா ஓ.பன்னீர் செல்வத்தின் உடம்பிற்குள் புகுந்து விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மரணத்திற்கு பிறகும் ஜெயலலிதாவின் ஆன்மா என்னவோ சொல்ல வருகிறது என்று கூறி வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications