ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் 11 ரயில்கள் ரத்து: தென்னக ரயில்வே
வேலூர்: குமரியில் இருந்து பெங்களூர் சென்ற ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை அருகே தடம்புரண்டதால் அந்த வழியாக செல்லும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குமரியில் இருந்து பெங்களூர் சென்ற ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலும் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Cancellation of Trains4m Chennai & Bangalore on 05.02.2016 due to Train No 16525. @swrbengaluru @SWRRLY @DrmChennai pic.twitter.com/T66hp0ITP8
— @GMSouthernrailway (@GMSRailway) February 5, 2016
மேலும் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால் பாக் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ராஜ்கோட் செல்லும் ரயில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications