வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம்: இஸ்ரோ
நாகர்கோவில்: சென்னையில் மழை வெள்ளத்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டதற்கு அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என இஸ்ரோ விஞ்ஞானியும், தும்பா விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனருமான சிவன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் மிகப் பெரிய விண் வெளி மையமாக கருதப்படும் திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன். இவர் நாகர்கோயில் இருளப்பபுரத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எங்கே மழை பெய்யும், காற்றழுத்த தாழ்வு நிலை எப்போது சென்னையை கடக்கும் என்பது போன்ற விவரங்கள் செயற்கைக்கோள் மூலம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழக அரசு இதனை கவனத்துடன் கையாளவில்லை. மழை பெய்வதற்கு முன்னரே ஆபத்தான பகுதிகளில் உள்ள வீடுகளை காலி செய்து மக்களை அப்புறப்படுத்திருந்தால் இந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்காது என்று விஞ்ஞானி சிவன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications