வருமான வரி வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவாரா?
சென்னை: ஏப்ரல் 3ம் தேதி வருமானவரித் துறை வழக்கில் முதல்வர் ஜெயலலிதா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு ஆளும் கட்சி வட்டாரம் முதல் எதிர்க்கட்சிகள் வரை பரவிக்கிடக்கின்றது.
கடந்த 1991 மற்றும் 1992, 1993 ம் ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று கூறி வருமான வரித்துறை அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு விரைவில் வழக்கை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தங்களுக்கு கால அவகாசம் தரக் கோரி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத எழும்பூர் நீதிமன்றம் வரும் ஏப்ரல் 3ம் தேதி எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் ஏப்ரல் 3ம் தேதி எழும்பூர் நீதி மன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரத்தை திமுக தரப்பு பெரிதுபடுத்தி, அதிமுகவுக்கு பெரிய அளவில் சரிவை உண்டாக்கிவிடும் என்றும், இதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதா விலக்கு கோருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கு விவகாரம் சூடு பிடித்துள்ளது. இதையே தேர்தல் பிரச்சாரமாக கொண்டு செல்ல திமுக தரப்பு தயாராக உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் ஒரு புறம் கிடுக்கிப்பிடி போடுவதும், மறுபுறம் வருமான வரி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதாலும் ஜெயலலிதா மிகவும் சோர்ந்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications