ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த சென்னை ஐடி ஊழியர்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் ஐ.டி நிறுவன ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை பெருங்குடியில் 5000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாணவர்களின் போராட்டடத்துக்கு ஆதரவு தெரிவித்து மெரினா நோக்கி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் தொடங்கியுள்ள போராட்டம் ஒவ்வொரு வினாடியும் தீவிரமடைந்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்களும் மெரினாவில் திரண்டு வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
மெரினாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். இந்நிலையில் சென்னை பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள் 5000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர்கள் சென்னை மெரினா நோக்கி திரண்டு வருகின்றனர். ஐடி ஊழியர்களின் போராட்டத்தால் சென்னை பெருங்குடி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருங்குடியில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் 5000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஐ.டி. ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் பல லட்சம் மாணவர்கள் வீதிக்கு வந்ததால் தமிழகமே போராட்டக்களமானது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications