For Quick Alerts
For Daily Alerts
Just In
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் நல்லது - பொன். ராதாகிருஷ்ணன்
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் தமிழக அரசுக்கு நல்லது, மக்களுக்கும் நல்லது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
குடியரசு துணை தலைவராக பதவியேற்றுள்ள வெங்கைய்யா நாயுடுவை சந்தித்து இன்று பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் நல்லது என்று கூறினார். இரு அணிகளும் இணைந்தால் நிலையான அரசு கிடைக்கும் மக்களுக்கும் நல்லது என்றார். தமிழகம் புதிய நிலையை எட்ட வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி என்று கூறிய பொன். ராதாகிருஷ்ணன், ரஜினி பாஜகவிற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சி என்று கூறினார்.
Comments
English summary
Union minister Pon Radhakrishnan has said that it is better if ADMK decides to unite.
Story first published: Friday, August 11, 2017, 17:32 [IST]