சென்னையில் விடிய விடிய மழை: மக்கள் ஹேப்பி அண்ணாச்சி
Recommended Video

சென்னை: சென்னையில் விடிய விடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரில் தினமும் மழை பெய்வதை பார்த்து ஏங்கிய சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் விடிய விடிய மழை பெய்துள்ளது. நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோயம்பேடு, புழல், வேளச்சேரி, கிண்டி, வடபழனி, நுங்கம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. மழையால் சில இடங்களில் நீர் தேங்கியுள்ளது.
மேலும் இன்றும் மழை நீடிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் யாரும் வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதுச்சேரியிலும் இரவு பலத்த பழை பெய்துள்ளது. சுமார் 3 மணிநேரம் மழை கொட்டி எடுத்ததால் வெட்பம் தணிந்து குளிர்ச்சியானது. மழையோடு சேர்த்து பலத்த காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications