தமிழகத்தில் 9 இடங்களில் சதம் அடித்த வெயில்: வாடும் மக்கள்

தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய கையோடு வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போதே மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் உள்ளனர். இந்நிலையில் வரும் நாட்கள் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒடிஸாவில் இருந்து தென் தமிழகம் வரை வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழகத்தில் 9 இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டிவிட்டது.
வெயிலின் அளவு டிகிரி ஃபாரன்ஹீட்டில்:
வேலூர் - 105, திருச்சி, கரூர் பரமத்தி, திருப்பத்தூரில் (வேலூர்) 104, மதுரை மற்றும் சேலத்தில் 103, தருமபுரி, பாளையங்கோட்டையில் 102 மற்றும் சென்னையில் 101 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது.












Click it and Unblock the Notifications