எனது அலுவலகத்தில் நடந்தது வருமான வரி சோதனை: நடிகர் விஷால்
எனது அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடந்தது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
சென்னை: தமது அலுவலகத்தில் நடந்தது வருமான வரி சோதனை என நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவினர் இன்று சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவு இதனை மறுத்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது:
என் அலுவலகத்தில் ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் பிரிவினர் சோதனை நடத்தவில்லை. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதா என தெரியவில்லை. என்னுடைய கணக்கு வழக்குகள் சரியாகவே உள்ளன.
இது அரசியல் ரீதியான மிரட்டல் எனில் அதையும் சந்திக்கவும் நான் தயாராகவே இருக்கிறேன். இணையத்தில் எச். ராஜா படம் பார்த்தது தவறுதான். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் நான் இருக்கிறேன். பாஜகவினர் தூண்டுதலால் இந்த ரெய்டு நடந்ததா என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறினார்.