Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு… மருந்து கம்பனிகளுடனான முறைகேடுகள் அம்பலம்?

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமியின் வீட்டில் 2வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு தொடர்கிறது. இதில் பல்வேறு மருந்து கம்பனிகளுடன் முறைகேடுகளில் ஈடுபட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமி மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருது வீட்டில் இன்று இரண்டாவது நாளாக வருமானவரிச் சோதனை தொடரந்து நடைபெற்று வருகிறது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகள் அலுவலகங்களில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் இன்று காலையுடன் ரெய்டு முடிந்த நிலையில், கீதாலட்சுமி வீட்டில் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

 அதிரடி சோதனை

அதிரடி சோதனை

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கீதாலட்சுமி வீட்டில் நேற்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் மருத்துவக் கல்லூரி தொடர்பாக பல மோசடிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உறவினர் வீடுகளில்..

உறவினர் வீடுகளில்..

அதே போன்று கீதாலட்சுமிக்கு சொந்தமான மற்றொரு வீடு போரூரில் இருப்பதால் அங்கும் ரெய்டு நடந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

 மருந்து கம்பனி முறைகேடு

மருந்து கம்பனி முறைகேடு

இந்த ரெய்டில் கீதாலட்சுமி சுகாதாரத்துறை சேவை இயக்குநராக இருந்த போது பல்வேறு முறைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மருந்து கொள்முதல் செய்த நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். செவன்ஸ்டார் டிரேடிங், சண்முகா பாலிமர், உப்கார் டிரேடிங் உள்ளிட்ட நிறுவனங்கள் சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 சிக்குவார்கள்?

சிக்குவார்கள்?

இரண்டாவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் நடத்திக் கொண்டிருக்கும் சோதனையில் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில் கீதாலட்சுமி மட்டுமல்லாமல் சுகாதாரத் துறையில் இருக்கக் கூடிய மற்ற அதிகாரிகளும் சிக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+