ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்தை பிரித்து மேயும் அதிகாரிகள்.... இன்றும் தொடரும் ரெய்டு
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்தில் இன்று 3-ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் 3-ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: வருமான வரித் துறையினரின் ரெய்டு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம் ஆகியவற்றில் 3-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கினர்.

மொத்தம் 190 இடங்களில் இந்த சோதனை தொடங்கிய நிலையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் முடிவடைந்துவிட்டது. 3-ஆவது நாளாக இன்று கொடநாடு எஸ்டேட்டில் ரெய்டு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அங்குள்ள கிரீன் டீ எஸ்டேட்டில் ரூ.16 கோடி கருப்பு பணம் வெள்ளையாக்கிய விவகாரத்தில் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அதேபோல் விவேக் ஜெயராமன் சிஇஓவாக உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் நமது எம்ஜிஆர் அலுவலகங்களிலும் 3-ஆவது நாளாக அதிகாரிகள் ஜல்லடை போட்டு முறைகேடுகளை தேடி வருகின்றனர்.
சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. மொத்தம் 135 இடங்களில் ரெய்டு தொடர்வதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications