தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தினர் வீடுகளில் இரண்டாவது நாளாக தொடரும் ஐ.டி ரெய்டு
Recommended Video

பெரம்பலூர் : பெரம்பலூரில் உள்ள பிரபல தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மட்டுமின்றி சமயபுரம், மாமல்லபுரம், சென்னை என பல இடங்களிலும் கல்வி நிறுவனங்கள் இந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை திடீரென வருமான வரித்துறையினர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தினர்.
கல்விக்குழுமங்கள் மட்டுமன்றி அவர்களுக்குச் சொந்தமான சர்க்கரை ஆலை, நிதி நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தாளாளரின் வீடு, திருச்சியில் உள்ள அவரது மகன் மற்றும் மகள் வீடுகளிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை சிக்கியுள்ள ஆவணங்களை வைத்து அவர்களிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பட்டு வருவதாகவும், இந்த சோதனை இன்று மாலை வரை நீடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications