For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில், முன்னாள் வனத்துறை அதிகாரி வீட்டில் ஐடி ரெய்டு
சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி கல்யாண சுந்தரம் என்பவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் அரசு அதிகாரிகள் வீடுகளில் அடுத்தடுத்து ஐடி ரெய்டுகள் நடந்து வருகின்றன. அதன் உச்சமாக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டிலேயே ரெய்டு நடந்தது.
இந்நிலையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி கல்யாண சுந்தரம் என்பவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடக்கிறது.
வனத்துறை அதிகாரியாக பதவி வகித்த கல்யாணசுந்தரம் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண சுந்தரம் தற்போது மாநில வல்லுநர் மதிப்பீட்டு குழு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
IT Raid going on in Kalyana sundaram house who is an ex forest officer.
Story first published: Thursday, December 22, 2016, 12:33 [IST]