புதுவை பண்ணை வீட்டில் என்ன இருக்கும்? சாணி தான் இருக்கும்- ரெய்டு குறித்து தினகரன் நக்கல்
தனது உறவினர்கள் வீட்டில் நடந்து வரும் வருமான வரித்துறையினர் சோதனை குறித்து தினகரன் பதிலளித்தார்.
Recommended Video

சென்னை : இன்று காலை முதல் சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் வீடுகளில் பெரிய அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா மற்றும் தினகரனின் மன்னார்குடி உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். திவாகரன், இளவரசி, விவேக், டாக்டர் வெங்கடேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் வீடுகளிலும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், தினகரன் பண்ணை வீடு, மிடாஸ் ஆலை அலுவலகங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தினகரன். அப்போது, தனது வீட்டில் ரெய்டு எதுவும் நடக்கவில்லை என்றும், இது எல்லாம் பழி வாங்கும் நோக்கத்தில் நடக்கும் ரெய்டு என்றும் அவர் தெரிவித்தார். பாண்டிச்சேரி பண்ணை வீட்டில் நடந்த ரெய்டு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தினகரன், பண்ணை வீட்டில் என்ன தான் இருக்கும்; சாணி தான் இருக்கும் என்று நக்கலாக பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications