கோரக்பூர்: இனிமேல் குழந்தைகள் உயிரிழப்பு கூடாது... கமல்ஹாசன் ட்விட்டரில் சீற்றம்!
சென்னை: உத்தரபிரதேசத்தில் இனிமேல் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படக்கூடாது, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் 60 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து நீதி விசாரணை நடத்த உ.பி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோரக்பூரில் உத்திரபிரதேச அரசால் பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நோய் தொற்று மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் கொத்து கொத்தாக இறந்தன.
பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரியில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் குழந்தைகள் பிரிவில் இருந்த 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஆகஸ்ட் 7ம் தேதி 9 குழந்தைகள், ஆகஸ்ட் 8ம் தேதி 12 குழந்தைகள், 9ம் தேதி 9 குழந்தைகள், 10ம் தேதி 23 குழந்தைகள் மற்றும் ஆகஸ்ட்11ம் தேதி 7 குழந்தைகளும் என மொத்தம் 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்ததாக சொல்வது உண்மையல்ல என்று மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. வினியோகஸ்தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்கப்பட்டாலும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
எனினும் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிவிலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
Children of UP die. @k_satyarthi's request to UP CM is the best course. See that it never happens again. India mourns its loss.
— Kamal Haasan (@ikamalhaasan) August 13, 2017
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகள் நலன் செயல்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி அவர்களே, உத்தரபிரதேச முதலமைச்சரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துங்கள்.. இனியும் உயிரிழப்புகள் கூடாது... குழந்தைகளின் மரணத்திற்கு இந்தியாவே இரங்கல் தெரிவிக்கிறது என்று பதிவிட்டுள்ள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications