சேட்டிலைட் போனுடன் இலங்கை செல்ல முயன்ற இத்தாலி நாட்டுக்காரர் சென்னையில் கைது!
சென்னையில் இருந்து கொழும்புவிற்கு இன்று காலை அந்த நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் இத்தாலியை சேர்ந்த பயணி ஒருவரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
அவரது சூட்கேசை சோதனை செய்த போது அதில் வித்தியாசமான எலக்ட்ரானிக் சாதனம் ஒன்று இருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை எடுத்து பார்த்த போது அது ‘சேட்டிலைட்' செல்போன் என தெரிய வந்தது.
சேட்டிலைட் தொலைபேசி பயன்பாட்டுக்கு இந்தியாவில் கடும் கட்டுப்பாடு உள்ளது. ஒருவேளை அதுபோன்ற போன்களை பயன்படுத்த வேண்டுமானால் உரிய அனுமதி பெற வேண்டியது அவசியம்.

ஆனால் அதுபோன்ற எந்த அனுமதியையும் இத்தாலி நாட்டுக்காரர் வைத்திருக்கவில்லை. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர், நேரி ஜியோவான்னி (69) என்று தெரியவந்தது. டிசம்பர் 7ம் தேதி முதல் சென்னையிலுள்ள ஒரு ஹோட்டலில் அவர் தங்கியிருந்துள்ளார்.
இந்தியாவிற்குள் சேட்டிலைட் போனுடன் வந்தபோது விமான நிலைய அதிகாரிகள் சோதித்து பார்க்காமல் விட்டுவிட்டனரா, அல்லது இந்தியா வந்த பிறகு இந்த போன் அவர் கைக்கு சென்றதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின்போது சேட்டிலைட் போன்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications