எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிப்போம்... இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவிப்பு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களிப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். திமுக நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிப்போம் என அறிவித்து விட்டது. இக்கட்சிக்கு சட்டசபையில் 89 உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒருவரும் சட்டசபையில் உள்ளனர்.

இதில் காங்கிரஸ் நாளை தனது முடிவை அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் முஸ்லீம் லீக் தனது முடிவை இன்று அறிவித்தது. அக்கட்சியின் சார்பில் கடையநல்லூர் சட்டசபை உறுப்பினராக உள்ள கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களிப்பார் என அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் அறிவித்துள்ளார். திமுகவின் நிலைப்பாட்டை ஒட்டி தங்களது கட்சியும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications