வெறும் சிலை இல்லை பெரியார், அவர் சிங்கம்.. எச்.ராஜாவுக்கு ஜெ தீபா கண்டனம்
Recommended Video

சென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு ஜெ தீபா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
பாஜக கட்சி வெற்றிபெற்ற பின் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அவர் பதிவிட்ட கருத்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
பல அரசியல் தலைவர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். எச்.ராஜா குறித்து தற்போது ஜெ தீபா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அதில் ''பெரியார் மண்ணில் இருந்து பெரியார் சிலையை அகற்றிவிட முடியுமா?. வெறும் சிலை இல்லை பெரியார், அவர் சிங்கம்'' என்றுள்ளார்.
மேலும் ''சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகளை நினைத்து கூட பார்க்க முடியாது. அம்மாவின் வாரிசு நான். அவர் தான் எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தது. பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் எச். ராஜா இந்த பதிவை நீக்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications