அவசர சட்டம் பற்றி அச்சம் வேண்டாம்.. சட்டசபையில் நிறைவேற்றினால் நிரந்தரமாகிவிடும்: ஓ.பி.எஸ் பேட்டி
வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் நாளை துள்ளிக்குதிக்கும் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்றும், நாளை வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும் எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் இன்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர சட்டம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நிரந்தர தீர்வு காணும் வரையில் போராட்டத்தை தொடரப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. அவசர கதியில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பவில்லை எனக் கூறி அலங்காநல்லூரிலும் வாடிவாசல் முன்பு பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜல்லிக்கட்டை பொறுத்த வரையில் தற்காலிகம் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அவசரச் சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. நிரந்தர சட்டம் என்பதை போராட்டக்காரர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தருவார்கள் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டம் அடுத்த வாரமே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் நாளை வாடிவாசல் திறக்கும் காளைகள் துள்ளிக்குதிக்கும் எனவும் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications