தமிழகத்தில் இந்த வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளை சட்ட விரோதமாக கருத முடியும்: ஹைகோர்ட் கிளை தடாலடி
சென்னை: 2018ம் ஆண்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடாத நிலையில் மதுரையில் 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டவிரோதமாக கருதலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த ஸ்ரீவைகுண்டம், தாடிக்கொம்பு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக, மதுரை ஹைகோர்ட் கிளையில் நடைபெற்ற வழக்கில் இன்று நீதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.
2017ல் வெளியிடப்பட்ட அரசாணை, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பொருந்தும் என ஹைகோர்ட் கூறியுள்ளது.

அரசாணை இல்லை
2018ல் அரசாணை வெளியிடாத நிலையில் ஜல்லிக்கட்டை நடத்தியதை சட்டவிரோதமாக கருத முடியும் என்றும் உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசு மெத்தனமாக இருந்தது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

சட்ட விரோதம்
அரசாணை இல்லாத நிலையில் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம் என்றும் உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஓராண்டு நிறைவு
ஜல்லிக்கட்டு புரட்சி வெடித்து ஓராண்டான நிலையில் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதை எழுச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ஹைகோர்ட் மதுரை கிளை கூறியுள்ள கருத்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

முதல்வரே துவக்கி வைத்தார்
கடந்த 14,15 மற்றும் 16ம் தேதிகளில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications