மதுரை விளாங்குடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… 40 காளைகள் விரட்டு.. போலீஸ் குவிப்பால் பதற்றம்
மதுரையில் ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. விளாங்குடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
மதுரை: மதுரை விளாங்குடியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சுமார் 40க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
விளாங்குடியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன. இதற்காக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனை அடக்குவதற்காக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். மேலும் வடமஞ்சு விரட்டும் நடைபெற்றது.

இதனைப்போன்றே, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லாம்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில், 30க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி இளைஞர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஆங்காகே ஜல்லிக்கட்டு நடத்தியதற்காக போலீசார் இளைஞர்களை கைது செய்து வருகின்றனர். இதனால் மதுரை அருகே குலமங்கலம் சாலையில் போலீஸை கண்டித்து முடக்காத்தான் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications