சேப்பாக்கம் மைதானத்தில் செல்போன் டார்ச் அடித்தும் கடும் எதிர்ப்பு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்ட நிலையில் செல்போன் டார்ச் அடித்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் திடீரென சிலர் செல்போன் லைட்டுகளை எரிய விட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தி வரும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்தன.

அதையடுத்து சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த நிலையில், மைதானத்தில் சிலர் செருப்புகளை வீிசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சிலர் செல்போன் டார்ச் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்தது.












Click it and Unblock the Notifications