அலங்காநல்லூரில் 144 தடை உத்தரவா? - இல்லை என்கிறார் மதுரை மாவட்ட எஸ்.பி.,
மதுரை அவனியாபுரம், அலங்கநல்லூர் மற்றும் பாலமேடு வாடிவாசல் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பதற்றம் அதிகரித்தது. மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி இதனை மறுத்துள்ளார்.
மதுரை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து,கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டிருப்பதோடு, அப்பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

போலீஸ் குவிப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிவாசல்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாலமேட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு
மதுரையில் இன்று தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதற்கிடையில், ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று சில அரசியல் தலைவர்களும், அப்பகுதி மக்களும் கூறியுள்ளதால், தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
144 தடை உத்தரவா?
தற்போது ஜல்லிக்கட்டுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருவதால், இந்த ஆண்டு தடையை மீறி அலங்காநல்லூர்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவின.எனவே மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
எஸ்.பி. மறுப்பு
ஆனால் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள மதுரை எஸ்.பி விஜேந்திர பிதாரி,மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் எண்ணம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிருப்தியில் மக்கள்
ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்க்கும் பகுதிகளுக்குச் செல்லும் போலீசார், மக்களை மிரட்டி வருகிறார்கள். வாகங்களில் மாடுகளை ஏற்றவோ, சாலைகளில் மாடுகளை பத்திக்கொண்டு போவதற்கோ கூட தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
வாடிவாசல் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. வாடிவாசல் மற்றும் மந்தை திடல் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் போலீசார் கேமராக்களை பொருத்தி வருகின்றனர். எப்பாடு பட்டாவது ஜல்லிக்கட்டு நடக்கும் என்று சொன்ன முதல்வர் இப்போது எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications