தனிச் சட்டம் கொண்டு வருவோம்.. இந்த ஆண்டுக்குள் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.. பொன். ராதா உறுதி
தூத்துக்குடி: ஜல்லிக்கட்டுக்கு தனி சட்டம் கொண்டு வந்து எப்படியும் இந்த ஆண்டுக்குள் நடத்த முயற்சி செய்யப்படும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொருப்பாளர் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் நிச்சயம் பாஜக கூட்டணி வலுவுள்ளதாக அமையும். எந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைக்கின்றன என்பது முக்கியம் அல்ல. எப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட்டணி அமைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

தமிழர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன் நடு நிலையாக இருந்த வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் இப்போது அதிகரிதது 60 சதவீதமாக இருக்கிறார்கள். இவர்கள் கூடடணி அடிப்படையில் இல்லாமல் எண்ணத்தின் அடிப்படையில் வாக்களிக்க தயாராகி வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதன் மீது நான்கு வார காலம் விசாரணை நடைபெற இருக்கிறது. இதனால் அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்தாக முடியும் என்ற காரணத்தால் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்தாண்டுக்குள் ஜல்லிக்கட்டு நடத்தும் சூழ்நிலை உருவாகும் என நம்பிக்கை எனக்கு உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications