தூத்துக்குடியில் விளைச்சல் அதிகரிப்பால் வரத்தும் அதிகரிப்பு- மல்லிகை பூ விலை சரிவு
கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ அதிகமாக வருவதால் விலை கணிசமாக குறைந்துள்ளது.
தூத்துக்குடி: கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை பூ வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில தேவை குறைந்துள்ளதால் பூ விலை கணிசமாக குறைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி, இடைசெவல், நாலாட்டின் புதூர், மந்திதோப்பு, காமநாயகன்பட்டி, சந்திரப்பட்டி, ஜமீன்தேர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்து வளர்த்து வருகின்றனர்.

தங்களது தோட்டத்தில் உள்ள கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மல்லிகை செடிகளை வளர்த்து வருகின்றனர். தற்போது இந்த பகுதி கிராமங்களில் மல்லிகை செடிகளில் பூக்கள் நன்றாக வளர்ந்துள்ளன. இந்த சீசனில் விளைச்சல் நன்றாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பூ விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூக்களை கூலி ஆட்கள் மூலம் பறித்து அதனை மொத்தமாக கோவில்பட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர். விளைச்சல் அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூக்கள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளது.
தற்போது பூ மாரக்கெட்டில் மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.100 வரை விலை போகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை போனது குறிப்பிடத்தக்கது. தற்போது திருமண சீசன் இல்லாததால் மல்லிகை பூக்களின் தேவை குறைந்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications