ஏற்காடு இடைத் தேர்தல்... அத்தனை அமைச்சர்களையும் களத்தில் இறக்கினார் ஜெ.!
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தல் பணியைக் கவனிப்பதற்காக வழக்கம் போல தனது அமைச்சர்கள் அத்தனை பேரையும் களத்தில் இறக்கி விட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
31 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட பிரமாண்டக் குழுவை முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக
ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு 4.12.2013 அன்று நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம் - பொருளாளர் நிதித்துறை அமைச்சர், நத்தம் இரா. விசுவநாதன் - திண்டுக்கல் மாவட்ட செயலாளர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர், கே.பி. முனுசாமி - கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர், ஆர்.வைத்திலிங்கம் - தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், ப.மோகன் - விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர், ஊரகத் தொழில் துறை அமைச்சர்.

பா. வளர்மதி
பா. வளர்மதி - இலக்கிய அணிச் செயலாளர், சமூக நலத்துறை அமைச்சர், பழனியப்பன் - தலைமை நிலையச் செயலாளர், உயர்கல்வி, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர், தாமோதரன் - கோவை புறநகர் மாவட்ட செயலாளர், வேளாண்மைத் துறை அமைச்சர், செல்லூர் கே.ராஜு - மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், கூட்டுறவுத் துறை அமைச்சர், கே.டி.பச்சைமால் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர், எடப்பாடி கே.பழனிசாமி - சேலம் புறநகர் மாவட்ட செயலாளர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், ஆர்.காமராஜ் - திருவாரூர் மாவட்ட செயலாளர், உணவுத் துறை அமைச்சர், வி.மூர்த்தி - திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் - கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.

கே.வி.ராமலிங்கம்
கே.வி.ராமலிங்கம் - ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர், பொதுப்பணித் துறை அமைச்சர், சின்னையா - காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தங்கமணி - நாமக்கல் மாவட்ட செயலாளர், தொழில் துறை அமைச்சர், டாக்டர் எஸ். சுந்தரராஜ் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர், செந்தூர்பாண்டியன் - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், ரமணா - திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், சண்முகநாதன் - தூத்துக்குடி மாவட்ட செயலாளர், சுற்றுலாத் துறை அமைச்சர், சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்.

செந்தில் பாலாஜி
செந்தில்பாலாஜி - கரூர் மாவட்ட செயலாளர், போக்குவரத்துத் துறை அமைச்சர், ஜெயபால் - நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர், முக்கூர் என்.சுப்பிரமணியன் - திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி - விருதுநகர் மாவட்ட செயலாளர், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர், ஆனந்தன் - திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வனத்துறை அமைச்சர், தோப்பு வெங்கடாச்சலம் - ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர், வருவாய்த் துறை அமைச்சர், பூனாட்சி - கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர், கே.சி. வீரமணி - வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அப்துல் ரஹீம் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்.

பொன்னையன்
பொன்னையன் - கழக அமைப்புச் செயலாளர், பி.எச்.பாண்டியன்- கழக அமைப்புச் செயலாளர், தமிழ்மகன் உசேன் - அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு வக்பு வாரியம், தம்பிதுரை, எம்.பி., - கொள்கை பரப்புச் செயலாளர், பொள்ளாச்சி ஏ.ஜெயராமன் - தேர்தல் பிரிவுச் செயலாளர், சட்ட மன்றப் பேரவை துணைத் தலைவர், செம்மலை, எம்.பி., - அமைப்புச் செயலாளர், தங்கமுத்து - விவசாயப் பிரிவுச் செயலாளர், தலைவர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், அன்பழகன் - ஜெயலலிதா பேரவைச் செயலாளர், சின்னசாமி, எம்.எல்.ஏ., - அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர், அன்வர்ராஜா - சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், உதயகுமார், எம்.எல்.ஏ., - எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்.

கோகுல இந்திரா
கோகுல இந்திரா, எம்.எல்.ஏ., - அமைப்புச் செயலாளர், செல்வராஜ் - அமைப்புச் செயலாளர், வேணுகோபால், எம்.பி., - மருத்துவ அணிச் செயலாளர், மனோஜ் பாண்டியன், எம்.பி., - வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், கலைமணி-மீனவர் பிரிவுச் செயலாளர், கமலகண்ணன் - அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர், சசிகலா புஷ்பா - மகளிர் அணிச் செயலாளர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர், குமார், எம்.பி.,- இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர், விஜயகுமார் - மாணவர் அணிச் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

வெற்றிக்குப் பாடுபடுங்கள்
கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications