விஜயதாரணியின் கணவர் மறைவு... ஜெயலலிதா இரங்கல்
சென்னை: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியின் கணவர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியின் கணவர் சிவகுமார் கென்னடி சமீபத்தில் மரணமடைந்தார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து விஜயதாரணிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த இரங்கல் கடிதத்தில், தங்களின் அன்புக் கணவர் திரு. சிவகுமார் கென்னடி மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்து, மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தைத் தாக்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் இறைவன் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டும். சிவகுமார் கென்னடியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிவகுமார் கென்னடியை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications