10 அமைச்சர்களுக்கு சீட் தராமல் வெளியே துரத்தி கதவை மூடிய ஜெயலலிதா
சென்னை: ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 10 பேருக்கு வருகிற சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை.
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை இன்று ஜெயலலிதா வெளியிட்டார். இதில் 227 தொகுிகளில் அதிமுகவும், மீதமுள்ள 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. இருப்பினும் அந்த 7 பேரும் கூட இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்கப் போகிறார்கள் என்பதால் சட்டப்படி 234 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுவது போலத்தான் கணக்கு வரும்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர்களில் 10 பேருக்கு தற்போது சீட் கிடைக்கவில்லை. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 27 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 10 பேருக்கு சீட் கொடுக்கவில்லை ஜெயலலிதா.

பி.வி.ரமணா
முக்கூர் சுப்பிரமணியன்
டிகே.எம் சின்னையா
பரமக்குடி சுந்தரராஜன்
பூனாட்சி
ஆனந்தன்
ப.மோகன்
சண்முகநாதன்
அப்துல் ரஹீம்
ஜெயபால்
ஆகியோருக்கு சீட் கிடைக்காமல் போய் விட்டது.
ரமணா - ரமணா அமைச்சரவையிலிருந்து அவ்வப்போது சேர்க்கப்பட்டும், நீக்கப்பட்டும் வந்தவர். சமீபத்தில் இவர் தனது 2வது மனைவியோடு இருக்கும் படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்ச்சர் டி.கே.எம். சின்னையா பதவியேற்றது முதல் ஒருமுறை கூட நீக்கப்படாமல் இருந்தவர். சமீபத்தில்தான் அவருக்கு ஆப்புவைத்தார் ஜெயலலிதா. தற்போது சீட் தராமல் துரத்தி விட்டார்.
பரமக்குடி சுந்தரராஜன் சமீபத்தில் மகளி்ர் விடுதிக்கு இரவில் போய் விசாரணை நடத்தி பெரும் சரச்ச்சைக்குள்ளானவர்.












Click it and Unblock the Notifications