42 வயது அதிமுக.. சிறப்பு மலர் வெளியிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் 42வது ஆண்டு விழா தொடக்கத்தையொட்டி கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார். ஆண்டு விழா சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று அதிமுகவின் 42வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதையொட்டி முதல்வர் ஜெயலலிதா அலுவலகத்திற்கு வருகை தந்தார். வழக்கம் போல ஜெயலலிதாவுக்கு கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். பின்னர் ஆண்டு விழா சிறப்பு மலரை அவர் வெளியிட்டார். கட்சிக்கொடியையும் ஏற்றி வைத்தார்.
பின்னர் நலிவடைந்த தொண்டர்கள் குடும்பத்தினருக்கும், மறைந்த அதிமுக தொண்டர்களின் குடும்பத்தினருக்கும் அவர் நிதியுதவியை தனது கரங்களால் அளித்தார்.












Click it and Unblock the Notifications