தேர்தல் நேர வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் 'அம்மா' தான்: சி.ஆர். சரஸ்வதி
தர்மபுரி: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என அதிமுக மகளிர் அணி துணை செயலாளரும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி வள்ளலார் திடலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் டி. ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளரும், சமூக நலவாரியத் தலைவியும், நடிகையுமான சி.ஆர். சரஸ்வதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழக மக்களின் நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா தான்.
ஜெயலலிதா செயல்படுத்தும் திட்டங்கள் பிற மாநில முதல்வர்களை கவர்ந்துள்ளது. அவர்கள் தமிழக திட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் மாநிலங்களில் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.
வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications