நல்லாட்சி வழங்கும் மாநிலங்களை பாதிக்கும் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கை
டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையின் பரிந்துரை, தேசிய மேம்பாட்டு மற்றும் தேசிய நலத் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தும் மாநிலங்களை பாதிப்பதாக உள்ளது. சிறு மாநிலங்களுக்கு 0.3 சதவீத பங்கு அளிக்கப்படுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சொந்த முயற்சியில் முன்னேறி வரும் பெரிய மாநிலங்களுக்கு கமிட்டி அறிக்கை கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மத்திய அரசின் நிதி அளவு மிகவும் குறைந்து விட்டது.
பெரிய மாநிலங்கள் தாங்கள் சொந்த நிதி ஆதாரம் மூலம் நல்லாட்சி வழங்கி வருகின்றன. இத்தகைய மாநிலங்கள், டாக்டர் ரகுராம் ராஜன் கமிட்டியின் பரிந்துரைகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கமிட்டியின் பரிந்துரை அமல் செய்யப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டுக்கு தனிநபர் விமான விகித அடிப்படையில் பாதி அளவே கிடைக்கும். சிறப்பு பிரிவில் இல்லாத மாநிலங்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீட்டில் 5ல் ஒரு பங்குதான் கிடைக்கும். இது நியாயமற்றது.
சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது பெரிய தவறாகும்.












Click it and Unblock the Notifications