ஜெ.வின் அப்பல்லோ "அர்ச்சனை" வீடியோ வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும்!
ஜெயலலிதாவின் அப்பல்லோ அர்ச்சனை வீடியோ மட்டும் வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும் என கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும் நிலைமை உருவாகுமாம்...ஜெயலலிதா என்கிற ஆளுமை மீதான பிம்பமே தலைகீழாக மாறும் என கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் திருப்பத்தை உருவாக்கியது சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்தின் ஃபேஸ்புக் போஸ்ட். ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது வீடியோ எடுக்கப்பட்டதாக ஜெயானந்த் போட்ட பதிவுதான் தமிழகத்தின் அரசியலில் பெரும் திருப்பத்தையே தரப் போகிறது.
இந்த ஃபேஸ்புக் பதிவை முதன் முதலாக செய்தியாக வெளியிட்டது ஒன் இந்தியா தமிழ்தான்.. அதன்பின்னரே அத்தனை ஊடகங்களும் வரிசை கட்டி செய்திகளை வெளியிடத் தொடங்கின.
இயல்பாக பேசும் காட்சிகள்...
இப்போது இந்த வீடியோ பற்றி அடுத்தடுத்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அப்பல்லோவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் இயல்பாக பேசிக் கொள்கிற காட்சிகள்தான் அந்த வீடியோவில் இருக்கின்றனவாம்.
ஜெ.வின் அர்ச்சனை
மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்கள் அணியும் பச்சை நிற உடையுடன் நரைத்த தலையுடன் சசிகலாவிடம் ஜெயலலிதா அரசியல்வாதிகளைப் பற்றி பேசியிருக்கிறார். அதிலும் மூத்த தலைவர் ஒருவரையும் அவரது குடும்பத்தையும் ஜெயலலிதா 'அர்ச்சனை' செய்த வார்த்தைகள் காதில் கேட்க முடியாதாம்.
அர்ச்சனை இடம் பெறுமா?
அந்த அர்ச்சனைகளை நிச்சயம் வெட்டித்தான் ரிலீஸ் செய்வார்கள்... ஒருவேளை எதிர்முகாமுக்கு அந்த வீடியோ போய்விட்டால் அர்ச்சனையுடனேயே அந்த வீடியோ வெளியாகும் வாய்ப்பும் இருக்கிறது.
பற்றி எரியும் தமிழக அரசியல்
அப்படி மட்டும் அர்ச்சனைகளுடன் வீடியோ வெளியானால் தமிழக அரசியலே பற்றி எரியும்.. அத்துடன் ஜெயலலிதா என்கிற மாபெரும் ஆளுமை மீதான பிம்பத்துக்கு என்ன நேரும் என்றே சொல்ல முடியாதாம்.
எப்போ ரிலீஸ்?