சிங்கத்தை சிறையில் அடைத்து விட்டீர்களே என்று சொல்கிறாரோ "அம்மா"...?
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தின் கவர் போட்டோவை மாற்றியுள்ளனர். சிங்கங்களுடன் ஜெயலலிதா இருப்பது போன்ற படத்தைப் போட்டுள்ளனர்.
சிங்கம் போல ஜெயலலிதா நிலை குலையாமல் இருப்பார் என்ற செய்தியை இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவதாக தெரிகிறது.
ஜெயலலிதா இருந்தவரை அதிமுக அரசின் திட்டங்கள், நிகழ்ச்சிகளின் தொகுப்புகள்தான் பெருமளவில் ஜெயலலிதா பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் இடம்பெறும்.

தற்போது ஜெயலலிதா சிறைக்குப் போயுள்ள நிலையில் அவரைப் பற்றிய படங்களை அதிகம் போட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அட்டைப் படத்தை மாற்றியுள்ளனர்.
அந்தப் படத்தில் ஜெயலலிதா நிற்கிறார். கூடவே சில அதிகாரிகளும், இரண்டு சிங்கங்களும் உள்ளன. அதில் ஒன்று பெண் சிங்கம். ஆனால் படத்தைப் பார்த்தால் கட்டிங், வெட்டிங் அண்ட் ஒட்டிங் போலத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications